அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். இது அல்லாமல் சரோஜா, துரோகி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சென்னை 28, மழை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது எஸ்.பி.பி.சரண் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அரசியல் கதைகளத்தை பின்புலமாக கொண்டு உருவாகி வருகிறது. படமாக அல்லாமல் வெப் தொடராக தயாராகிறது. இதற்கு 'அதிகாரம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் அதுல்யா ரவி, அபிராமி, தேவ், அரவிந்த் ஆகாஷ், ஜான் விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்போது இந்த வெப்தொடர் இறுதிகட்டத்தில் உள்ளது.