எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி குறித்து சமூக வலைத்தளங்களில் நேற்று கடும் பரபரப்பு ஏற்பட்டது. அவரது 34 வருட கால நண்பரான ஸ்ரீனிவாஸ் ராவ் என்பவர் வீடியோ பதிவொன்றையும், ஒரு கடிதத்தையும் வெளியிட்டதுதான் அந்த பரபரப்புக்குக் காரணம்.
ராஜமவுலி மற்றும் அவரது மனைவி செய்யும் டார்ச்சரால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “நான் ராஜமவுலியுடன் எமதொங்கா படம் வரை நல்ல நட்புறவில் இருந்து வந்தேன். ஒரு பெண்ணுக்காக என்னை தூக்கி எறிந்து விட்டார் ராஜமவுலி. 55 வயதாகும் நான் இன்னும் திருமணம் செய்யாமல் தனி ஆளாக இருப்பதற்கு ராஜமவுலி தான் காரணம். அவருக்காக என் காதலை தியாகம் செய்தேன். என்னுடைய தற்கொலைக்கு காரணம் என்றால் அது ராஜமவுலியும் அவரது மனைவி ரமா இருவரும் தான்.
நானும் ராஜமவுலியும் மிக நெருங்கிய நட்பில் இருந்த விஷயம் விஷயம் இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பாளர் சந்திரசேகர் ஏலட்டி, இயக்குனர் ஹனு ராகவபுடி உள்ளிட்டோருக்கு நன்றாகவே தெரியும். எங்களது இந்த நட்பில் ஒரு பெண் குறுக்கிடுவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒரு பெண்ணுக்காக என் வாழ்க்கையை அழித்து விட்டார் ராஜமவுலி” என்று கூறியுள்ளார் சீனிவாச ராவ்.
இது குறித்து ராஜமவுலி தரப்பிலிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. அவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.