பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

உறியடி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகரும், இயக்குனருமான விஜய் குமார். தற்போது இவர் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினி உடன் இருக்கும் போட்டோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‛‛எப்படியோ ரஜினி சாரை சந்தித்துவிட்டேன். கூலி படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்து ஆசி பெற்றது வாழ்நாளுக்குமான சிறந்த தருணம். லவ் யூ தலைவா. இந்த சந்திப்பிற்கு காரணமான நண்பர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளது.