பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் |
உறியடி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகரும், இயக்குனருமான விஜய் குமார். தற்போது இவர் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினி உடன் இருக்கும் போட்டோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‛‛எப்படியோ ரஜினி சாரை சந்தித்துவிட்டேன். கூலி படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்து ஆசி பெற்றது வாழ்நாளுக்குமான சிறந்த தருணம். லவ் யூ தலைவா. இந்த சந்திப்பிற்கு காரணமான நண்பர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளது.