உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. இதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் இந்த படத்தால் பள்ளி குழந்தைகள் கெட்டு போகின்றனர் என ஆசிரியை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.
மாணவர்களின் நடத்தை பற்றி தெலுங்கானா அரசு பள்ளி ஆசிரியர்கள், மாநில கல்வி ஆணையத்துடன் ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற ஒரு ஆசிரியை கூறும்போது, ‛‛அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தை பார்த்த பின் பள்ளிக் குழந்தைகள் கெட்டு போய் உள்ளனர். மாணவர்களும் அந்த படத்தில் வருவதுபோன்று மோசமான ஹேர்ஸ்டைல் மற்றும் ஆபாசமாக பேசுகின்றனர்.
அரசு பள்ளி மட்டுமல்ல, தனியார் பள்ளிகளிலும் இதே நிலை தான் உள்ளது. பெற்றோர்களும் இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவது கிடையாது. இந்த படத்திற்கு எதன் அடிப்படையில் சென்சார் சான்று கொடுத்தார்கள் என தெரியவில்லை. இதையல்லாம் பார்க்கையில் ஒரு ஆசிரியையாக நான் தோற்றது போன்று உள்ளது''.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.