ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. இதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் இந்த படத்தால் பள்ளி குழந்தைகள் கெட்டு போகின்றனர் என ஆசிரியை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.
மாணவர்களின் நடத்தை பற்றி தெலுங்கானா அரசு பள்ளி ஆசிரியர்கள், மாநில கல்வி ஆணையத்துடன் ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற ஒரு ஆசிரியை கூறும்போது, ‛‛அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தை பார்த்த பின் பள்ளிக் குழந்தைகள் கெட்டு போய் உள்ளனர். மாணவர்களும் அந்த படத்தில் வருவதுபோன்று மோசமான ஹேர்ஸ்டைல் மற்றும் ஆபாசமாக பேசுகின்றனர்.
அரசு பள்ளி மட்டுமல்ல, தனியார் பள்ளிகளிலும் இதே நிலை தான் உள்ளது. பெற்றோர்களும் இதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவது கிடையாது. இந்த படத்திற்கு எதன் அடிப்படையில் சென்சார் சான்று கொடுத்தார்கள் என தெரியவில்லை. இதையல்லாம் பார்க்கையில் ஒரு ஆசிரியையாக நான் தோற்றது போன்று உள்ளது''.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.