பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் |
பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த மணிவண்ணன் 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன்பிறகு பல வெற்றி படங்களை இயக்கினார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அவர் இயக்கத்தில் வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மிகப்பெரிய வெற்றியே அவரது வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தது. ஆனால் அவரது முதல் படம் ‛கோபுரங்கள் சாய்வதில்லை' அல்ல.
இந்தப் படத்திற்கு முன்பே அவர் இயக்கி முடித்த படம் 'ஜோதி'. இதில் மோகன், அம்பிகா, சத்யஜித், சில்க் ஸ்மிதா, கவுண்டமணி, வினு சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
ஒரு கிராமத்திற்கு நாடகத்தில் நடிக்க வரும் ஹீரோ அந்த கிராமத்தில் டீக்கடை நடத்தும் பெண்ணை காதலிப்பது தான் கதை. எந்த எதிர்ப்பும் இல்லாத இவர்கள் காதலுக்கு செயற்கையாக பல காரணங்களை காட்டி திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்ததால் படம் படுதோல்வி அடைந்தது. இளையராஜாவின் இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண பிரச்னைகள் காரணமாக படம் வெளியாகாமல் இருந்து இரண்டாவது படமாக தாமதமாக வெளியானது.
இந்தப் படம் மணிவண்ணனுக்கு முதல் படமாக அமைந்திருந்தால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். ஜோதி படம் தான் அவரது வெற்றிக்கு வழி விட்டு கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை முதல் படமாக கொடுத்தது.