சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
இயக்குனர் கே.பாக்யராஜும், மணிவண்ணனும் ஒரே காலகட்டத்தில் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர்கள். பாக்யராஜ் பாரதிராஜாவிடமிருந்து பிரிந்து வந்து பல படங்களை இயக்கிய பிறகு இயக்குனர் ஆனவர், மணிவண்ணன். இவர் தீவிர இளையராஜா ரசிகர். இளையராஜாவிற்கும் மணிவண்ணனை பிடிக்கும். இதனால் தயாரிப்பாளர் கலைமணியிடம் மணிவண்ணனுக்கு சிபாரிசு செய்தார். அப்படி கிடைத்த முதல் வாய்ப்புதான் 'கோபுரங்கள் சாய்வதில்லை' படம்.
மணிவண்ணனின் முதல் படமே வெள்ளி விழா கண்டது. அழகான மோகனுக்கு அழகில்லாத அருக்காணி சுஹாசினியை மணமுடித்து விடுவார்கள். மோகன் ஸ்டைலான ராதாவோடு வாழ்வார். அந்த வீட்டுக்கு சுஹாசினியை வேலைக்காரியாக அழைத்து செல்வார் மோகன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை. படத்தில் சுஹாசினியின் நடிப்பு பேசப்பட்டது. தேசிய விருதுகூட கிடைக்கும் என்றார்கள்.
இந்தப் படம் வெளியானபோது வெளியிட்ட விளம்பரங்களில் மணிவண்ணனும், கே.பாக்யராஜும் ஒருவரை மோதிக் கொள்வது போன்று வாளோடு நிற்கும் படத்தை போட்டு பாரதிராஜாவின் சிஷ்யர்களில் சிறந்தவர் யார்? கே.பாக்யராஜா, மணிவண்ணனா? என்று கேப்சன் போட்டிருந்தார். இது ஒரு வேடிக்கையான விளம்பரம் என்று சொன்னாலும், பாரதிராஜாவிடம் பணியாற்றிய காலத்தில் இருவருக்கும் இடையில் ஒரு மவுனயுத்தம் நடந்து கொண்டிருந்தது அதன் வெளிப்பாடுதான் இந்த விளம்பரம் என்றும் சொல்வார்கள்.