யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
'புஷ்பா 2' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படம் பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தை இயக்கிய திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில்தான் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகின.
இதனிடையே, அட்லி இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வர ஆரம்பித்தன. சல்மான்கானுக்காக கதை எழுதி வந்த அட்லி, அதன் பட்ஜெட் அதிகமானதால் தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள். அந்த பட்ஜெட்டிற்கு அல்லு அர்ஜுன் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என பேசி முடிவெடுத்தார்கள் என்றும் செய்திகள் வந்தது.
பாலிவுட் மீடியாக்கள் இந்தப் படம் பற்றி கூடுதலாக அப்டேட்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். படத்தின் நாயகியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேசியுள்ளதாகவும், ஹிந்தி நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அல்லு அர்ஜுன் அப்பா கதாபாத்திரத்தில் சீனியர் தமிழ் நடிகர் நடிக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள். இசையமைப்பதற்கு சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்.
ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும் பாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.