கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் | 'சக்தித் திருமகன்' கதைத் திருட்டு சர்ச்சை : இயக்குனர் விளக்கம் | 8 மணி நேரம்தான் நடிப்பேன் : ராஷ்மிகா சொல்வது சரியா, சாத்தியமா? |

'புஷ்பா 2' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படம் பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தை இயக்கிய திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில்தான் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகின.
இதனிடையே, அட்லி இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வர ஆரம்பித்தன. சல்மான்கானுக்காக கதை எழுதி வந்த அட்லி, அதன் பட்ஜெட் அதிகமானதால் தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள். அந்த பட்ஜெட்டிற்கு அல்லு அர்ஜுன் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என பேசி முடிவெடுத்தார்கள் என்றும் செய்திகள் வந்தது.
பாலிவுட் மீடியாக்கள் இந்தப் படம் பற்றி கூடுதலாக அப்டேட்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். படத்தின் நாயகியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேசியுள்ளதாகவும், ஹிந்தி நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அல்லு அர்ஜுன் அப்பா கதாபாத்திரத்தில் சீனியர் தமிழ் நடிகர் நடிக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள். இசையமைப்பதற்கு சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்.
ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும் பாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.