யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
சோசியல் மீடியாவில் இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களை பயன்படுத்தி வரும் பிரபலங்களின் கணக்குகள் அவ்வப்போது ஹேக் செய்யப்படுவதும் அவற்றில் சம்பந்தமில்லாத தகவல்கள் பகிரப்பட்டு பரபரப்பு ஏற்படுத்துவதும் அவ்வப்போது நடைபெற்று வருவதுதான். அந்த வகையில் தற்போது சைபர் கிரைம் விஷமிகள் மூலமாக நடிகை திரிஷாவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட பின் அதில் திரிஷா கிரிப்டோ கரன்சி குறித்து பகிர்ந்துள்ளதாக ஒரு ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக இதுகுறித்து பகிர்ந்துள்ள திரிஷா, தனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதை மீட்டெடுக்கும் வரை அதில் எது பதிவிடப்பட்டாலும் அது தன்னுடையது பதிவு அல்ல என்றும் ஒரு எச்சரிக்கை விளக்கம் அளித்துள்ளார்.
திரிஷா இன்ஸ்டாவில் எச்சரிக்கை பதிவை இடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, எக்ஸ் தளத்தில் ஹேக்கர்கள் பதிவு செய்த டுவீட் டெலீட் செய்யப்பட்டது. இதனால் எக்ஸ் கணக்கு மீட்கப்பட்டதா அல்லது ஹேக்கர்கள் உஷாராகிவிட்டனரா என்பது தெரியவில்லை. திரிஷாவும் இதுவரை மீட்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை.