சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் சாந்தினி தமிழரசன் தனது திருமண வாழ்க்கை குறித்தும் தனது கேரியர் குறித்தும் பேசியிருக்கிறார். 'பயர்' படத்தின் புரமோஷனின் போது அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'எங்களுக்கு 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதற்கு ஒன்றரை வருடம் முன்னதாகவே திருமணம் குறித்து எல்லாவற்றையும் பேசி வைத்திருந்தோம். அந்த நேரத்தில் தான் நான் நடித்த படங்கள் ரிலீஸானது. ஒருவேளை அதற்கு முன் ரிலீஸாகியிருந்தால் நான் சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு போவது பற்றி யோசித்திருப்பேன். திருமணத்தால் என்னுடைய கேரியர் பாதிக்கும் என்று நினைத்தேன். அதனால் எங்களது திருமணத்தை இன்செக்யூராக தான் பார்த்தேன். ஆனாலும் என்னுடைய திருமணத்தை நான் எஞ்சாய் செய்தேன்.
நந்தாவும் என் கேரியருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவார். இன்ஸ்டாகிராமில் கிளாமராக போட்டோஷூட் நடத்துவேன். அதற்கெல்லாம் நந்தா கோபப்பட்டதே கிடையாது. நான் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. அது எனக்கு வருத்தமாகவே இருக்கிறது. என்னதான் நான் திறமையை காட்ட நினைத்தாலும் அதற்கான சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை' என அந்த பேட்டியில் சாந்தினி பேசியுள்ளார்.