சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். தெலுங்கு நடிகை சோபிதாவை கடந்த ஆண்டில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நாகசைதன்யா. அதையடுத்து சமந்தா எப்போது இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இயக்குனர் ஒருவரை அவர் காதலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன். அதேபோன்று தான் திருமண பந்தத்தில் இருந்தும் கடந்து வந்துள்ளேன். அதோடு சில விஷயங்களில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன், இதனால் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். மற்றபடி நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து அவர் மீது எந்தவித பொறாமையோ, வெறுப்போ எனக்கு ஏற்படவில்லை.
அதோடு இந்த சமூகத்தில் பெண்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் வாழ்க்கையில் முழுமை பெற்று விட்டதாகவும் கருதுகிறார்கள். ஆனால் நான் அதை அப்படி பார்க்கவில்லை. தனிமையிலும் மகிழ்ச்சி உள்ளது. பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலும் தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் வாழ முடியும் என்பதே எனது கருத்தாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.