மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கேரளாவில் கொச்சியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் மிஹிர் முகமது என்பவர் தனது சக மாணவர்கள் சிலரால் கிண்டல் கேலிக்கு ஆளாக்கப்பட்டு தாக்குதலுக்கும் ஆளாகி அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டான். இந்த நிகழ்வு கேரளாவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவையும் தாண்டி பல பிரபலங்கள் இறந்து போன மாணவனுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் இந்த நிகழ்வு குறித்து தங்களது கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், “இந்த 2025ல் இன்னொரு இளம் உயிரை நாம் இழந்துள்ளோம். சிலரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, ஆணவம் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இதுபோன்று மனரீதியாக, உணர்வு ரீதியாக, சில சமயம் உடல் ரீதியான இது போன்ற துன்புறுத்தல்களும் கொடுமைப்படுத்தலும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதை வெறும் இரங்கல்களுடன் கடந்து செல்ல கூடாது. நிச்சயம் நடவடிக்கை தேவை. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் அடி ஆழத்திலிருந்து விசாரிப்பார்கள் என நம்புகிறேன். மிஹிர் முகமதுக்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்.