ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
‛நாடோடிகள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் அபிநயா. வாய் பேச முடியாத இவர் நடிப்பில் அசத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடிக்கிறார். விஷாலும், இவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்யப்போவதாகவும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.
இதுபற்றி ஒரு பேட்டியில் அபிநயா கூறுகையில், ‛‛விஷால் எனக்கு காதல் புரொபஸ் பண்ணாரு, திருமணம் செய்யப்போறோம் என தப்பான செய்திகள் பரப்புறாங்க, அதையெல்லாம் நம்பாதீங்க, அது எதுவுமே உண்மையில்லை, முட்டாள்தனமானது. அவுங்க ஏதோ வயித்து பிழைப்பிற்காக பேசுறாங்கனு விட்டுவிடுவேன். என்னவேணா சொல்லுங்க, நான் பெரிதாக எதையும் கண்டுக்கொள்வதில்லை'' என்றார்.
மேலும் ‛‛நான் ஒரு ரிலேசன்ஷிப்பில் இருக்கிறேன். எனக்கு பாய் பிரண்ட் இருக்காரு, 15 வருடம் அவரை தெரியும். சின்ன வயதில் இருந்தே எனக்கு நண்பர். நாங்க பேசி பழகுனோம் அதன்பின் காதல் ஆனது. நல்ல மனிதர். திருமணத்தை பற்றி இன்னும் யோசிக்கவில்லை, அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது'' என்றார்.