நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் |
கடந்த 2000ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடித்து வெளிவந்த படம் 'அலைபாயுதே'. இப்படம் இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட மணிரத்னம் அலைபாயுதே படத்தின் ரகசியம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, "நான் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோலை வைத்து இயக்க தான் முதலில் திட்டமிட்டிருந்தேன். ஷாருக்கானும் இந்தக் கதைக்கு ஓகே சொல்லியிருந்தார். ஆனால், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் எப்படி அமைய வேண்டும் என்பது அப்போது எனக்கு சரியாக தெரியவில்லை. அதனால், அலைபாயுதே படத்தை எடுக்காமல், 'தில் சே' படத்தை இயக்கினேன். தில் சே படத்திற்கு பிறகு தான், அலைபாயுதே கதையில் எது மிஸ் ஆனது என்பதை கண்டுபிடித்தேன்" என தெரிவித்துள்ளார். மேலும், அலைபாயுதே படம் ஹிந்தியில் 2002ம் ஆண்டு 'சாத்தியா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதனை ஷாட் அலி இயக்க விவேக் ஓபராய் - ராணி முகர்ஜி நடித்திருந்தனர்.