இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள அடுத்த படம் ' நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' . இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்த படத்தை தனுஷின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த எஸ்.ஜே. சூர்யா இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தனுஷ் உடன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்தேன். ஜாலியாக இருந்தாலும் எமோசனல் மற்றும்தனித்துவமான படமாக இருந்தது. தனுஷுக்கு ஒரு கேள்வி ராயன் படத்திற்கு பிறகு பிஸியாக இருந்தபோதும் எப்படி உடனே ஒரு ஜாலியான படத்தை எடுத்தீர்கள்? படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்" என இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட பதிவில், ‛‛நேரம் ஒதுக்கி எங்கள் படத்தைப் பார்த்ததற்கு நன்றி சார். படம் உங்களுக்கு பிடித்தது மகிழ்ச்சி. உங்கள் விமர்சனத்தால் எங்களது குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்'' என குறிப்பிட்டுள்ளார்.