வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா சமீப காலங்களாக தனது சர்ச்சையான பேச்சுக்களால் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக அவரது படங்கள் தான் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் ஆகும் போதும் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அனல் பறக்கும், ரத்தம் தெறிக்கும் அதிக அளவு வன்முறை காட்சிகளுடன் தனது படங்களை கொடுத்து வந்தவர் ராம்கோபால் வர்மா. இப்போது மலையாளத்தில் வெளியாகி உள்ள உன்னி முகுந்தன் நடித்துள்ள ‛மார்கோ' திரைப்படம் தனது படங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக வன்முறை விருந்தாக உருவாகி இருப்பதை பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.
இது குறித்து தனது மகிழ்ச்சியை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ராம்கோபால் வர்மா, “மார்கோ படத்தை விட வேறு எந்த ஒரு படத்திற்கும் இந்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமான பாராட்டு கிடைத்திருக்குமா என்றால் ஒருபோதும் இல்லை. அந்த அளவிற்கு இந்த படத்தை பார்ப்பதற்கு நான் சாவதற்கு கூட தயாராக இருக்கிறேன். ஆனால் உன்னி முகுந்தன் என்னை நிச்சயம் கொல்ல மாட்டார் என்றும் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். கிட்டத்தட்ட ஏழு சண்டை காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. ஏழுமே அதிக அளவில் வன்முறை கொண்ட சண்டைக் காட்சிகளாக தான் படமாக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த படம் ராம்கோபால் வர்மாவின் பாராட்டுகளை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.