துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
அல்லு அர்ஜுன் - தெலங்கானா மாநில அரசு இடையிலான மோதல் விவகாரம் தெலுங்குத் திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 'புஷ்பா 2' பிரிமியர் காட்சியில் பெண் மரணம், அல்லு அர்ஜுன் கைது, ஜாமின் விடுதலை, சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு, அல்லு அர்ஜுன் பத்திரிகையாளர் சந்திப்பு, அல்லு அர்ஜுன் விசாரணைக்கு அழைப்பு என கடந்த ஒரு வார காலமாகவே தெலங்கானா மாநிலத்தில் அரசியலுக்கும், சினிமாவுக்கும் இடையில் சர்ச்சை நிலவி வருகிறது.
சிறையிலிருந்து வெளிவந்த அல்லு அர்ஜுனை தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் சந்தித்துப் பேசியது ஆந்திர முதல்வரை கடும் கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. அதனால்தான் அவர் சட்டமன்றத்தில் கடுமையாக விமர்சித்துப் பேசினார் என்று சொல்கிறார்கள். அவரது பேச்சு அல்லு அர்ஜுன் இமேஜையும் மொத்தமாக டேமேஜ் செய்துவிட்டது. அதற்கு மேலும் ஆதாரத்தைக் கொடுக்க கூட்ட நெரிசல் நடந்த தியேட்டர் சிசிடிவி வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள். அல்லு அர்ஜுன் செய்தது தவறு என்று மக்கள் மத்தியில் பதிய ஆரம்பித்துவிட்டது.
தெலங்கானா அரசு சிறப்புக் காட்சிகள் ரத்து, டிக்கெட் கட்டண உயர்வு ரத்து என்பதும் பெரிய தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தெலங்கானா அரசை பின்பற்றி ஆந்திர மாநில அரசும் அப்படியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பேசி வருகிறார்கள். அடுத்தடுத்து பல பெரிய படங்கள் வெளிவர உள்ளது. ஹைதராபாத் மாநகரின் தியேட்டர் வசூலும் அவர்களுக்கு மிக முக்கியமானது. அதனால், நடிகர் சிரஞ்சீவி தலைமையில் ஒரு குழுவை அமைத்து தெலங்கானா முதல்வரை சந்தித்துப் பேச திட்டம் நடந்து வருகிறதாம். தேவைப்பட்டால் சிரஞ்சீவியின் தம்பியும், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உதவியையும் நாடலாம் என்றும் பேசி வருகிறார்களாம்.
அல்லு அர்ஜுன் இன்று காலை போலீஸ் விசாரணைக்கு செல்ல உள்ளார். அதன்பின் இந்த விவகாரத்தில் மேலும் திருப்பங்கள் நடக்கலாம். அதைப் பொறுத்து அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்று தெரிகிறது.