சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது மகன் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். அந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சிறையில் ஒரு நாள் இருந்து வெளியில் வந்த அல்லு அர்ஜுனை தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் சென்று சந்தித்தனர். கடந்த வாரம் தெலுங்கானா மாநில சட்டசபையில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனையும், தெலுங்கு சினிமா பிரபலங்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அன்று மாலையே பத்திரிகையாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன், “பிரீமியர் காட்சியின் போது நடந்தது ஒரு விபத்து,” என்று பேசியிருந்தார்.
இதனிடையே, அல்லு அர்ஜுனை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹைதராபாத் காவல்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து இன்று (டிச.,24) காலை 11 மணியளவில் அவர் ஆஜராகினார். அவரிடம் போலீசார் நான்கரை மணிநேரம் விசாரித்தனர். 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்பட்டதாகவும் அதற்கு அல்லு அர்ஜூன் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
பவுன்சர்களை அனுப்பியவர் கைது
அல்லு அர்ஜூன், புஷ்பா 2 திரையிட்ட தியேட்டருக்கு வந்தபோது அவரது பாதுகாப்புக்கு பவுன்சர்களை அனுப்பியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமும் விசாரிக்கின்றனர்.




