இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது மகன் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். அந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சிறையில் ஒரு நாள் இருந்து வெளியில் வந்த அல்லு அர்ஜுனை தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் சென்று சந்தித்தனர். கடந்த வாரம் தெலுங்கானா மாநில சட்டசபையில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனையும், தெலுங்கு சினிமா பிரபலங்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அன்று மாலையே பத்திரிகையாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன், “பிரீமியர் காட்சியின் போது நடந்தது ஒரு விபத்து,” என்று பேசியிருந்தார்.
இதனிடையே, அல்லு அர்ஜுனை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹைதராபாத் காவல்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து இன்று (டிச.,24) காலை 11 மணியளவில் அவர் ஆஜராகினார். அவரிடம் போலீசார் நான்கரை மணிநேரம் விசாரித்தனர். 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்பட்டதாகவும் அதற்கு அல்லு அர்ஜூன் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
பவுன்சர்களை அனுப்பியவர் கைது
அல்லு அர்ஜூன், புஷ்பா 2 திரையிட்ட தியேட்டருக்கு வந்தபோது அவரது பாதுகாப்புக்கு பவுன்சர்களை அனுப்பியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமும் விசாரிக்கின்றனர்.