நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
தனுஷ் இயக்குனராக ராயன் படத்திற்கு பிறகு மூன்றாவது படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். இவருடன் இணைந்து அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை தனுஷின் வுன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படம் வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி அன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. மற்ற பணிகள் நடந்து வருகின்றன. தற்போது இட்லி கடை பட படப்பிடிப்பிற்கு இடைவெளிவிட்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் தனுஷ்.