எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டிருந்த சேலத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு நாயுடு, தனது நண்பர் நாராயணன் அய்யங்காருடன் இணைந்து சேலம் மார்டன் தியேட்டர் நிறுவனத்திறகு இணையாக கோவையில் ஒரு ஸ்டூடியோ கட்ட வேண்டும் என்று உருவாக்கியதுதான் கோவை சென்டிரல் ஸ்டூடியோ. அதன் பிறகு தயாரிப்பில் இறங்கிய இருவரும் தயாரித்த முதல் படம் 'ஆர்யமாலா'.
முதல் படத்தையே பிரமாண்டமாக தயாரிக்க வேண்டும், வெற்றியும் உறுதிப்பட இருக்க வேண்டும் என்று கருதி புகழ்பெற்ற நாட்டுப்புறக்கதையான காத்தவராயன் - ஆர்யமாலா கதையை எடுத்தனர். அப்போது வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் ஆக்ஷன் ஹீரோவான பி.யூ.சின்னப்பாவை நாயகனாக ஒப்பந்தம் செய்தனர். நாயகியாக எம்.ஆர்.சந்தான லட்சுமியை நடிக்க வைத்தனர். இவர்கள் தவிர என்.எஸ்.கிருஷ்ணன் இதில் நாயகனின் நண்பராக நடித்தார், அவரது மனைவி மதுரம் அவருக்கு ஜோடியாக நடித்தார். அப்போது பிரபலமாக இருந்த பொம்மன் இரானி இயக்கினார்.
ஜி.ராமநாதனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. படமும் ஹிட்டானது. அதுவரை பாகவதர் ரசிகர்களாக இருந்தவர்கள் சின்னப்பா ரசிகர்களாக மாறினர். பாகவதரிடம் அழகும் பாட்டும் மட்டுமே இருந்தது. சின்னப்பாவிடம் கூடுதலாக வீரமும், சண்டை திறனும் இருந்ததால் அவரது ரசிகர்களாக மாறினார்கள். ஆர்யமாலாவுக்கு விமர்சனம் எழுதிய அன்றைய பத்திரிகைகள் இனி சின்னப்பாதான் நம்பர் ஒண் நடிகர் என்றே குறிப்பிட்டனர்.