புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டிருந்த சேலத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு நாயுடு, தனது நண்பர் நாராயணன் அய்யங்காருடன் இணைந்து சேலம் மார்டன் தியேட்டர் நிறுவனத்திறகு இணையாக கோவையில் ஒரு ஸ்டூடியோ கட்ட வேண்டும் என்று உருவாக்கியதுதான் கோவை சென்டிரல் ஸ்டூடியோ. அதன் பிறகு தயாரிப்பில் இறங்கிய இருவரும் தயாரித்த முதல் படம் 'ஆர்யமாலா'.
முதல் படத்தையே பிரமாண்டமாக தயாரிக்க வேண்டும், வெற்றியும் உறுதிப்பட இருக்க வேண்டும் என்று கருதி புகழ்பெற்ற நாட்டுப்புறக்கதையான காத்தவராயன் - ஆர்யமாலா கதையை எடுத்தனர். அப்போது வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் ஆக்ஷன் ஹீரோவான பி.யூ.சின்னப்பாவை நாயகனாக ஒப்பந்தம் செய்தனர். நாயகியாக எம்.ஆர்.சந்தான லட்சுமியை நடிக்க வைத்தனர். இவர்கள் தவிர என்.எஸ்.கிருஷ்ணன் இதில் நாயகனின் நண்பராக நடித்தார், அவரது மனைவி மதுரம் அவருக்கு ஜோடியாக நடித்தார். அப்போது பிரபலமாக இருந்த பொம்மன் இரானி இயக்கினார்.
ஜி.ராமநாதனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. படமும் ஹிட்டானது. அதுவரை பாகவதர் ரசிகர்களாக இருந்தவர்கள் சின்னப்பா ரசிகர்களாக மாறினர். பாகவதரிடம் அழகும் பாட்டும் மட்டுமே இருந்தது. சின்னப்பாவிடம் கூடுதலாக வீரமும், சண்டை திறனும் இருந்ததால் அவரது ரசிகர்களாக மாறினார்கள். ஆர்யமாலாவுக்கு விமர்சனம் எழுதிய அன்றைய பத்திரிகைகள் இனி சின்னப்பாதான் நம்பர் ஒண் நடிகர் என்றே குறிப்பிட்டனர்.