தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகை த்ரிஷா திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட தனது 22 வருட பயணத்தில் இருக்கிறார். தற்போதும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக, சில படங்களில் கதையின் நாயகியாக நடித்தபடி முதல் வரிசை நாயகியாகவே இருக்கிறார். அதேசமயம் சிலருடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி, இன்னொரு பக்கம் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நிறுத்தப்பட்டு என பல சச்சையான கசப்பான அனுபவங்களை தாண்டி தான் வெற்றிகரமாக பயணித்து வருகிறார் த்ரிஷா. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே நடிகர் விஜய்யுடன் அவர் நெருக்கமாக இருப்பது போன்று இணைத்து பேசப்பட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன.
அப்படித்தான் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காக விஜய், திரிஷா இருவரும் ஒரே விமானத்தில் கோவா சென்று வந்தார்கள் என்கிற தகவலும் அது குறித்த புகைப்படங்களும் வெளியாகி சமீபநாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திரிஷாவை பொறுத்தவரை இந்த விஷயங்களுக்கு நேரடியாக எதுவும் ரியாக்ஷன் காட்ட மாட்டார். ஆனால் தனது சோசியல் மீடியா பதிவுகள் மூலமாக தனது பதிலை வேறு விதமாக சொல்வார்.
அப்படி சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “மனிதர்களுக்கு உங்களை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நாய்களுக்கு உங்களை பிடிக்காமல் இருந்தால் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும். அப்படியானால் இதுதான் சுய பரிசோதனை செய்வதற்கான நேரம்” என்று கூறியுள்ளார்.
சமீபநாட்களாக தன் மீது சோசியல் மீடியாவில் சில மனிதர்கள் பேசும் வெறுப்பு பேச்சுகளால்தான் த்ரிஷா இப்படி ஒரு பதிவிட்டு இருக்கிறார் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.