வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப் பிரதேச நகரமான கூர்க் தான் அவரது சொந்த ஊர். இருந்தாலும் அவரது சிறு வயதில் சென்னையிலும் வசித்திருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் முதன் முதலில் பார்த்த படம் 'கில்லி' என்றும் அது பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார். “கில்லி' படம் தான் நான் தியேட்டர்ல முதன் முதலில் பார்த்த படம். தியேட்டர்ல நான் பார்த்த முதல் ஹீரோ தளபதி விஜய் தான். அந்தப் படத்துல 'அப்படி போடு அப்படி போடு' பாட்டு இருக்குல்ல, என்னோட வாழ்க்கைல மெஜாரிட்டி நேரம் அந்தப் பாட்டுக்கு நடனமாடியிருக்கேன். எங்க அப்பா ரஜினிகாந்த் படங்கள் நிறைய பார்ப்பாரு. ஆனா, எனக்கு விஜய், த்ரிஷா அவங்களைத்தான் தியேட்டர்ல முதல்ல பார்த்தேன்,” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ராஷ்மிகா குழந்தையாக இருந்தபோது பார்த்து வியந்த விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் ஜோடியாக நடித்துவிட்டார். அப்போது கதாநாயகியாக நடித்த த்ரிஷா, ராஷ்மிகா வளர்ந்து கதாநாயகி ஆன பின்னும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.