தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் |

ரஜினிகாந்த் உடன் 'சந்திரமுகி' படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இப்படம் 800 நாட்களுக்கு மேலாக ஓடி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பி.வாசு இயக்கியிருந்த இப்படத்தில், பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதன்பின்னர், 'குசேலன்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். தொடர்ந்து 'தர்பார், அண்ணாத்த' படங்களிலும் ரஜினி - நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர்.
இந்த நிலையில் தனியார் ஊடகத்திற்கு நயன்தாரா அளித்த பேட்டியில், சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது: சந்திரமுகி படத்தில் எனக்கு முதல் காட்சி ரஜினி சாருடன் தான் இருந்தது. அப்போது அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பது எனக்கு தெரியாது. அதுதான் எனக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். ஒருவேளை எனக்கு முன்பே தெரிந்திருந்தால் பயம் வந்திருக்கும். அவர்களின் பிரபலம் குறித்தும், நட்சத்திரம் என்பது குறித்தும் அறியாமல் இருப்பது எனக்கு உதவியது. இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
நயன்தாராவின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகள் வரை ரஜினிகாந்தின் புகழ் பரவியிருந்தும், அவர் உச்ச நடிகர் என்பது கூட தெரியாது என்பது போல நயன்தாரா பேசியிருப்பதற்கு சமூக வலைதளத்தில் நயன்தாராவை ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 'கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க' என கிண்டல் அடித்து வருகின்றனர்.