32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் 'தக்லைப்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. கதைப்படி இந்த படத்தில் அவர் கமல்ஹாசனின் மகனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வரும் சிம்பு, அதையடுத்து கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார். ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு' போன்ற படங்களில் நடித்துள்ள சிம்பு, இப்போது நான்காவது முறையாக அவர் இயக்கத்தில் நடிக்க போகிறார்.