இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'புஷ்பா 2'. இப்படம் முன் பதிவிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அதனால், முதல் நாள் வசூலாக மிகப்பெரும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடியே அமைந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய முதல் நாள் வசூல் மட்டும் உலக அளவில் சுமார் 200 கோடியைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். சில தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்கள் 250 கோடியைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்கள். இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சொல்வதுதான் அதிகாரப்பூர்வமானது. எப்படியும் இன்னும் சில மணி நேரங்களில் தயாரிப்பு நிறுவனம் அதை அறிவித்துவிடும். அதுவரையிலும் அவரவர் விருப்பப்படி 200 கோடி, 250 கோடி என்று சொல்வார்கள்.
உலக அளவில் எவ்வளவு வசூலிக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், தெலுங்கைப் பொறுத்தவரையில் நிச்சயம் புதிய வசூல் சாதனை என்பது மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.