32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடி விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா. சென்னையில் நடந்த 'புஷ்பா 2' பட விழாவில் தன்னுடைய காதல் பற்றி பேசுகையில், ஊருக்கெல்லாம் தெரிந்த விஷயம்தானே என்று கூறியிருந்தார் ராஷ்மிகா.
ராஷ்மிகா கதாநாயகியாக நடித்த 'புஷ்பா 2' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. அப்படத்தைத் தனது காதலர் விஜய் தேவரகொன்டா குடும்பத்துடன் ஹைதராபாத்தில் பார்த்து ரசித்தார் ராஷ்மிகா. விஜய் தேவரகொன்டாவின் அம்மா மாதவி, சகோதரர் நடிகர் ஆனந்த் ஆகியோர் படத்தைப் பார்த்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
முக்கியமான நாட்களில் விஜய் தேவரகொன்டா குடும்பத்தாருடன் ராஷ்மிகா தங்குவது வழக்கம். தீபாவளி பண்டிகையைக் கூட அவர்களுடன்தான் கொண்டாடினார். தற்போது தனது புதிய பட வெளியீட்டையும் அவர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார்.