பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று மீண்டுள்ளார். இவரது நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த சிட்டாடெல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு இன்று(நவ., 29) காலமாகி உள்ளார். இது சமந்தா மற்றும் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மறைவு பற்றி சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மீண்டும் நாம் சந்திக்கும் வரை அப்பா..." என்று உடைந்த இதய ஈமோஜியுடன் உருக்கமாக மனமுடைந்து ஒரு பதிவை போட்டுள்ளார்.
கணவர் நாகசைதன்யா உடன் பிரிவு, மயோசிடிஸ் நோய் பாதிப்பு என அடுத்தடுத்து துயரங்களை எதிர்கொண்டு வரும் சமந்தா இப்போது பெரும் துயரமாக தனது தந்தையை இழந்துள்ளார். இதையடுத்து சமந்தாவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.