ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வெளியான நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை தன்னுடைய ஆவணப்படத்தில் நயன்தாரா பயன்படுத்தியதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்ஓசி தரவில்லை. அதோடு அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் என நயன்தாரா அறிக்கை வெளியிட்டு தனுஷை கடுமையாக விமர்சித்தார். மேலும் நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இடையே நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கில் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இப்படியான நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அந்த பதிவில்பொய் சொல்லி ஒருத்தரின் வாழ்க்கையை நீங்கள் அளிக்கும்போது அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த கடன் வட்டியுடன் உங்களுக்கு திரும்பி வரும். கர்மா ஒருபோதும் விடுவதில்லை என்று கோடிட்டு காட்டியுள்ளார் நயன்தாரா.
அவர் இப்படி ஒரு பதிவை போட்டதை அடுத்து தனுஷை தான் மறைமுகமாக இப்படி அவர் சாடி உள்ளார் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.