'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
திரையுலகில் புகழ்பெற்றவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் உருவாக்கி விடும். அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக அனைவராலும் கை காட்டப்படுபவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். தங்களது 29 வருட மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாகவும், தங்கள் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலே இதற்கு காரணம் என்றும் ஏ.ஆர். ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் அண்மையில் அறிவித்தனர். ரஹ்மான் தம்பதியின் விவாகரத்து வெளியான அடுத்த சில மணிநேரங்களில் மோகினி டே என்ற இசைக்கலைஞரின் விவாகரத்து அறிவிப்பு பெரும் பேசுபொருளாக மாறியது.
இவர், ஏ.ஆர். ரஹ்மான் இசைக்குழுவில் கிடார் இசைக்கலைஞராக இருப்பதே அதற்கு காரணம். இவரையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அனைவரின் கவனமும் மோகினி டே பக்கம் திரும்பியது. இதுபோன்ற வதந்திகள் பரவி வருவது தமது மனம் வருத்தம் அடைவதாக ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீனும் கூறி இருந்தார்.
இந்நிலையில் தம்மைச் சுற்றி வரும் வதந்திகள் குறித்து இசைக்கலைஞர் மோகினி டே முதல் முறையாக மனம் திறந்துள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு தமது நிலையை கூறி உள்ளார். அவர் அந்த பதிவில் கூறி உள்ளதாவது; ஆதாரமற்ற, தவறான தகவல் பரப்பப்படுவது ஏற்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எங்களின் நிகழ்வுகளை (விவாகரத்து விவகாரம்) கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது. அவரது இசைக்குழுவில் பல ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன்.
ஏ.ஆர். ரஹ்மான் எனது தந்தையை போன்றவர். நான் மிகவும் மதிக்கும் நபர். எங்கள் இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். தனிமை என்ற முடிவு மிகவும் வலி மிகுந்தது. எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். இவ்வாறு அவர் தமது வீடியோ பதிவில் கூறி உள்ளார்.