‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழா தற்போது நடந்து வருகிறது. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரையிடப்படுகிறது. இதோடு தற்போது 'ஆசான்' என்கிற குறும்படமும் திரையிடப்படுகிறது.
இந்த படத்தை சமீபத்தில் வெளியாகி விருதுகளை பெற்ற 'கட்டில்' படத்தை இயக்கிய இ.வி.கணேஷ் பாபு இயக்கி உள்ளார். ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் வனிதா தயாரித்துள்ளார், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார், என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இ.வி.கணேஷ்பாபு நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராமன் அப்துல்லா, தஞ்சை அமலன், ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்
படத்தைப் பற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறும்போது “உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட ஆளுமைகள் இந்த விழாவுக்கு வருகை தருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் எனது படமும், பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சிறுவயதில் மாணவர்கள் செய்யும் குற்றத்திற்கு அவர்களை தண்டிப்பதை விட, அந்தத் தவறை உணரச் செய்வதின் மூலம் அவர்கள் வாழ்வை, ஒரு ஆசிரியரால் உயர்த்த முடியும் என்ற கதைக்கருவை மையமாகக் கொண்டு ஆசான் உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.