சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
1941ல் தயாராகி 1942ல் வெளியான தெலுங்கு படம் 'பாலநாகம்மா'. இதில் என்.டி.ராமராவ், அஞ்சலி தேவி நடித்திருந்தார்கள். இதே படத்தை 40 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். இதனை சங்கர் இயக்கினார். மாயாஜாலங்கள் நிறைந்த பேண்டசி படம்.
சரத்பாபு நாயகனாக நடித்திருந்தார். ஸ்ரீதேவி பால நாகம்மாவாக நடித்திருந்தார், கே.ஆர்.விஜயா நாகதேவியாக நடித்திருந்தார். இவர்கள் தவிர அசோகன், மஞ்சுபார்கவி, வெண்ணிற ஆடை நிர்மலா, மஞ்சுளா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் வெளிவந்த பிறகு கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக படத்தின் காமெடி காட்சிகள் விரசமாக இருப்பதாகவும், இளையராஜாவின் மேற்கத்திய பின்னணி இசை கதைக்கு பொருந்தவில்லை என்றும், சரத்பாவுவின் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் ஸ்ரீதேவியின் அழகும், நடிப்பும், நடனமும் கொண்டாடப்பட்டது.
படத்தின் பின்னணி இசை விமர்சிக்கப்பட்டாலும் பாடல்கள் ஹிட்டானது. குறிப்பாக 'பிலஹரி' ராகத்தில் அமைந்த 'கூந்தலிலே மேகம் வந்து குடிபுகுந்தாளோ கவி எழுத...' என்ற பாடல் இன்றைக்கும் ரசிக்கப்பட்டு வருகிறது.