பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

1941ல் தயாராகி 1942ல் வெளியான தெலுங்கு படம் 'பாலநாகம்மா'. இதில் என்.டி.ராமராவ், அஞ்சலி தேவி நடித்திருந்தார்கள். இதே படத்தை 40 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். இதனை சங்கர் இயக்கினார். மாயாஜாலங்கள் நிறைந்த பேண்டசி படம்.
சரத்பாபு நாயகனாக நடித்திருந்தார். ஸ்ரீதேவி பால நாகம்மாவாக நடித்திருந்தார், கே.ஆர்.விஜயா நாகதேவியாக நடித்திருந்தார். இவர்கள் தவிர அசோகன், மஞ்சுபார்கவி, வெண்ணிற ஆடை நிர்மலா, மஞ்சுளா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் வெளிவந்த பிறகு கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக படத்தின் காமெடி காட்சிகள் விரசமாக இருப்பதாகவும், இளையராஜாவின் மேற்கத்திய பின்னணி இசை கதைக்கு பொருந்தவில்லை என்றும், சரத்பாவுவின் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் ஸ்ரீதேவியின் அழகும், நடிப்பும், நடனமும் கொண்டாடப்பட்டது.
படத்தின் பின்னணி இசை விமர்சிக்கப்பட்டாலும் பாடல்கள் ஹிட்டானது. குறிப்பாக 'பிலஹரி' ராகத்தில் அமைந்த 'கூந்தலிலே மேகம் வந்து குடிபுகுந்தாளோ கவி எழுத...' என்ற பாடல் இன்றைக்கும் ரசிக்கப்பட்டு வருகிறது.