ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
கோமாளி படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் என்ற மல்டி ஸ்டார் படமும் ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன், சைரன், பிரதர் போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்தன. இதையடுத்து அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் வெளியாக உள்ளன. இதைத்தொடர்ந்து டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் படத்திலும் நடிக்க போகிறார் ஜெயம் ரவி.
இப்படியான நிலையில், தனது படங்களின் தொடர் தோல்வி காரணமாக அடுத்து சுதா கெங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய சுதா, அவர் நடிக்க மறுத்ததை அடுத்து மலையாள நடிகர் நிவின் பாலி இடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி இடத்தில் அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.