மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
கோமாளி படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் என்ற மல்டி ஸ்டார் படமும் ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன், சைரன், பிரதர் போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்தன. இதையடுத்து அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் வெளியாக உள்ளன. இதைத்தொடர்ந்து டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் படத்திலும் நடிக்க போகிறார் ஜெயம் ரவி.
இப்படியான நிலையில், தனது படங்களின் தொடர் தோல்வி காரணமாக அடுத்து சுதா கெங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய சுதா, அவர் நடிக்க மறுத்ததை அடுத்து மலையாள நடிகர் நிவின் பாலி இடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி இடத்தில் அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.