சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கோமாளி படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் என்ற மல்டி ஸ்டார் படமும் ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன், சைரன், பிரதர் போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்தன. இதையடுத்து அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் வெளியாக உள்ளன. இதைத்தொடர்ந்து டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் படத்திலும் நடிக்க போகிறார் ஜெயம் ரவி.
இப்படியான நிலையில், தனது படங்களின் தொடர் தோல்வி காரணமாக அடுத்து சுதா கெங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய சுதா, அவர் நடிக்க மறுத்ததை அடுத்து மலையாள நடிகர் நிவின் பாலி இடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி இடத்தில் அவர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.




