இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நாளை மறுநாள் (22ம் தேதி) வெளிவர இருக்கும் படம் 'தூவல்'. இந்த படத்தை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜவேல் கிருஷ்ணா இயக்கி உள்ளார். சதீஷ் இசை அமைத்துள்ளார், தர்வேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா கூறும்போது “ஒக்கேனக்கல் பகுதியில் ஆற்றில் மீன் பிடித்து வாழும் ஆற்று மீனவர்கள் பற்றிய கதை. வயலுக்கு வரப்பு போன்று ஆற்றிலும் கற்களை கொண்டு தனி தனி குடும்பங்களுக்கு தனித்தனி பகுதி ஒதுக்கி மீன் பிடிக்கும் கதை. நேராக ஓடி வரும் ஆறு ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறு சிறு அருவிகாக மாறும். இந்த சிற்றருவிகளைத்தான் 'தூவல்' என்கிறார்கள். இந்த தொழிலும், தொழில் சார்ந்த பிரச்னைகளையும் பேசும் படம் இது. தமிழ் சினிமாவிற்கு இது புதிய கதை களமாகும்” என்றார்.