ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் |
இந்தியன் பனோரமா என் அழைக்கப்பட்டும் சர்வதேச திரைப்பட விழா வருகிற 28ம் தேதி கோவாவில் தொடங்குகிறது. இந்த விழாவில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரையிடத் தேர்வாகி உள்ளது. தமிழில் தேர்வாகி உள்ள ஒரே படமும் இதுதான். இந்த நிலையில் மாதவன் நடித்து இன்னும் வெளிவராத 'ஹிஸாப் பராபர்' என்ற ஹிந்தி படம் வருகிற 26ம் தேதி சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட இருக்கிறது.
இப்படம் ஒரு கார்ப்பரேட் வங்கி ஒன்றின் மிகப்பெரிய மோசடி ஒன்றை ஒரு சாதாரண மனிதன் அம்பலப்படுத்துவது மாதிரியான கதை. இப்படத்தில் சாதாரண மனிதராக டிக்கெட் கலெக்டர் கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். தனது வங்கி கணக்கில் உள்ள குளறுபடியை கண்டுபிடிக்கும் மாதவன் அதை தொடரும்போது அதில் பெரிய மோசடி இருப்பதை கண்டுபிடிக்கிறார். அது எப்படி நிரூபிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை. இதில் கார்பரேட் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார். அஸ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.பி. சினிகார்ப் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
இப்படம் குறித்து மாதவன் கூறும்போது, “இந்தப் படம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. நீதி என்பது எளிதாக கிடைத்து விடாது என்பதையும் புரிந்து கொள்ள வைக்கும் படம். தார்மீக பொறுப்புணர்வை பற்றி பேசும் இந்தப் படத்தை இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் பார்க்கவிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.