சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு | நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி | 100 கோடி கொடுத்தாலும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற மாட்டேன் : இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் | தொடர்ந்து 'டார்கெட்' செய்யப்படும் பிரியங்கா மோகன் | 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் |
இந்தியன் பனோரமா என் அழைக்கப்பட்டும் சர்வதேச திரைப்பட விழா வருகிற 28ம் தேதி கோவாவில் தொடங்குகிறது. இந்த விழாவில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரையிடத் தேர்வாகி உள்ளது. தமிழில் தேர்வாகி உள்ள ஒரே படமும் இதுதான். இந்த நிலையில் மாதவன் நடித்து இன்னும் வெளிவராத 'ஹிஸாப் பராபர்' என்ற ஹிந்தி படம் வருகிற 26ம் தேதி சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட இருக்கிறது.
இப்படம் ஒரு கார்ப்பரேட் வங்கி ஒன்றின் மிகப்பெரிய மோசடி ஒன்றை ஒரு சாதாரண மனிதன் அம்பலப்படுத்துவது மாதிரியான கதை. இப்படத்தில் சாதாரண மனிதராக டிக்கெட் கலெக்டர் கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். தனது வங்கி கணக்கில் உள்ள குளறுபடியை கண்டுபிடிக்கும் மாதவன் அதை தொடரும்போது அதில் பெரிய மோசடி இருப்பதை கண்டுபிடிக்கிறார். அது எப்படி நிரூபிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை. இதில் கார்பரேட் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார். அஸ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.பி. சினிகார்ப் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
இப்படம் குறித்து மாதவன் கூறும்போது, “இந்தப் படம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. நீதி என்பது எளிதாக கிடைத்து விடாது என்பதையும் புரிந்து கொள்ள வைக்கும் படம். தார்மீக பொறுப்புணர்வை பற்றி பேசும் இந்தப் படத்தை இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் பார்க்கவிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.