சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
இந்தியன் பனோரமா என் அழைக்கப்பட்டும் சர்வதேச திரைப்பட விழா வருகிற 28ம் தேதி கோவாவில் தொடங்குகிறது. இந்த விழாவில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரையிடத் தேர்வாகி உள்ளது. தமிழில் தேர்வாகி உள்ள ஒரே படமும் இதுதான். இந்த நிலையில் மாதவன் நடித்து இன்னும் வெளிவராத 'ஹிஸாப் பராபர்' என்ற ஹிந்தி படம் வருகிற 26ம் தேதி சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட இருக்கிறது.
இப்படம் ஒரு கார்ப்பரேட் வங்கி ஒன்றின் மிகப்பெரிய மோசடி ஒன்றை ஒரு சாதாரண மனிதன் அம்பலப்படுத்துவது மாதிரியான கதை. இப்படத்தில் சாதாரண மனிதராக டிக்கெட் கலெக்டர் கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். தனது வங்கி கணக்கில் உள்ள குளறுபடியை கண்டுபிடிக்கும் மாதவன் அதை தொடரும்போது அதில் பெரிய மோசடி இருப்பதை கண்டுபிடிக்கிறார். அது எப்படி நிரூபிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை. இதில் கார்பரேட் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார். அஸ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை எஸ்.பி. சினிகார்ப் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
இப்படம் குறித்து மாதவன் கூறும்போது, “இந்தப் படம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. நீதி என்பது எளிதாக கிடைத்து விடாது என்பதையும் புரிந்து கொள்ள வைக்கும் படம். தார்மீக பொறுப்புணர்வை பற்றி பேசும் இந்தப் படத்தை இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் பார்க்கவிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.