மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகள் ஆர்த்தியைக் காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன் என ஜெயம் ரவி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விவாகரத்து கோரி ஜெயம் ரவி வழக்கு தொடர்ந்தார். அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில் ஜெயம் ரவி எடுத்த முடிவு தனது கவனத்திற்கு வரவில்லை. அவரை சந்திக்க முயற்சித்தும் முடியாமல் போனது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே அவர்களது விவாகரத்து வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் இன்றே குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையில் ஜெயம் ரவி நேரிலும், ஆர்த்தி காணொலி மூலமும் ஆஜரானார்கள். சமரச தீர்வு மையத்தில் இருவரும் நேரில் ஆஜராவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.