300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு தெலுங்குப் படங்களுக்கு வட இந்திய மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதை 'புஷ்பா 1, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட சில பான் இந்தியா படங்களின் வரவேற்பும், வசூலும் நிரூபித்தது.
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்தடுத்து இரண்டு பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்', 2025 ஜனவரி 10ம் தேதியும், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' டிசம்பர் மாதம் 5ம் தேதியும் வெளியாக உள்ளன.
'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. படத்தில் நடித்துள்ள ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, தயாரிப்பாளர் தில் ராஜு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் வட இந்தியாவில் நடத்த உள்ளனர். பீஹார் மாநிலம் பாட்னா நகரில் நவம்பர் 17ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வட இந்திய மாநிலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் போது அது ஹிந்தி ரசிகர்களிடம் நன்றாக சென்று சேர்கிறது என்பதற்காக இப்படி நடத்துகிறார்கள் என்று டோலிவுட்டில் சொல்கிறார்கள். அது படம் வெளியான பின்பு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துத்தான் உறுதியாகச் சொல்ல முடியும்.