அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு தெலுங்குப் படங்களுக்கு வட இந்திய மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதை 'புஷ்பா 1, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட சில பான் இந்தியா படங்களின் வரவேற்பும், வசூலும் நிரூபித்தது.
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்தடுத்து இரண்டு பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்', 2025 ஜனவரி 10ம் தேதியும், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' டிசம்பர் மாதம் 5ம் தேதியும் வெளியாக உள்ளன.
'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. படத்தில் நடித்துள்ள ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, தயாரிப்பாளர் தில் ராஜு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் வட இந்தியாவில் நடத்த உள்ளனர். பீஹார் மாநிலம் பாட்னா நகரில் நவம்பர் 17ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வட இந்திய மாநிலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் போது அது ஹிந்தி ரசிகர்களிடம் நன்றாக சென்று சேர்கிறது என்பதற்காக இப்படி நடத்துகிறார்கள் என்று டோலிவுட்டில் சொல்கிறார்கள். அது படம் வெளியான பின்பு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துத்தான் உறுதியாகச் சொல்ல முடியும்.