கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛சாகுந்தலம்'. பன்மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் மகாகவி காளிதாசர் எழுதிய புராண கதையான சாகுந்தலம் கதையை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளது. இதில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்த்தாக தேவ் மோகனும் நடித்துள்ளனர். பிப்., 17ல் திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் ஐந்து மொழிகளில் இன்று(ஜன., 9) வெளியானது.
ஐதராபாத்தில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தாவும் பங்கேற்றார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தாலும் இந்த பட புரொமோஷனில் அவர் பங்கேற்றுள்ளார். விழாவில் பேசிய இயக்குனர் குணசேகரன்: ‛‛இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான்'' என்று பாராட்டினார். அதைக்கேட்ட சமந்தா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் பேசிய சமந்தா, ‛‛எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் எப்படியும் பங்கேற்க வேண்டும்'' என வந்ததாக கூறினார்.