300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛சாகுந்தலம்'. பன்மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் மகாகவி காளிதாசர் எழுதிய புராண கதையான சாகுந்தலம் கதையை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளது. இதில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்த்தாக தேவ் மோகனும் நடித்துள்ளனர். பிப்., 17ல் திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் ஐந்து மொழிகளில் இன்று(ஜன., 9) வெளியானது.
ஐதராபாத்தில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தாவும் பங்கேற்றார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தாலும் இந்த பட புரொமோஷனில் அவர் பங்கேற்றுள்ளார். விழாவில் பேசிய இயக்குனர் குணசேகரன்: ‛‛இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான்'' என்று பாராட்டினார். அதைக்கேட்ட சமந்தா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் பேசிய சமந்தா, ‛‛எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் எப்படியும் பங்கேற்க வேண்டும்'' என வந்ததாக கூறினார்.