'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த படம் 'அமரன்'. அப்படம் முதல் நாளில் 42 கோடி வசூலையும், 10வது நாளில் 200 கோடி வசூலையும் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த வார இறுதி விடுமுறை நாளில் இப்படத்திற்கு மீண்டும் வசூல் அதிகரித்தது. தீபாவளி விடுமுறை நாட்களில் பெற்ற வசூல் போல மீண்டும் கிடைத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், தற்போது 13 நாட்களிலேயே இப்படம் 250 கோடி வசூலைக் கடந்துளளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருடம் வெளியான படங்களின் வசூலைப் பொறுத்தவரையில் தற்போது 'அமரன்' படம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் 450 கோடி வசூலைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. ரஜினிகாந்த்தின் 'வேட்டையன்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2' ஆகிய படங்களின் வசூல் 'அமரன்' படத்தை அடுத்து 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.