காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகின் தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நேற்று தீபாவளி ரிலீஸாக தெலுங்கு மற்றும் தமிழில் அவர் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகி உள்ளது. பொதுவாகவே கதை அம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் குறூப், கிங் ஆப் கொத்த உள்ளிட்ட படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை மாறி மாறி வெளிப்படுத்தி வருகிறார் துல்கர் சல்மான்.
அதே சமயம் சமீபத்தில் ஆவேசம் படத்தில் பஹத் பாசில் பேசிய சில பஞ்ச் வசனங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகின. இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் துல்கர் சல்மானிடம் நீங்கள் ஏன் பஞ்ச் வசனம் பேசுவதில்லை என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “பஞ்ச் வசனங்களை சில ஹீரோக்கள் மட்டும் பேசினால் தான் அது பொருத்தமாக இருக்கும். நான் பேசினால் தம்பி இன்னும் நீ அந்த அளவுக்கு வளரவில்லை என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். கிங் ஆப் கொத்த படத்தில் கூட அதுதான் நடந்தது” என்று கூறியுள்ளார்.