விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகின் தாண்டி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நேற்று தீபாவளி ரிலீஸாக தெலுங்கு மற்றும் தமிழில் அவர் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகி உள்ளது. பொதுவாகவே கதை அம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் குறூப், கிங் ஆப் கொத்த உள்ளிட்ட படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை மாறி மாறி வெளிப்படுத்தி வருகிறார் துல்கர் சல்மான்.
அதே சமயம் சமீபத்தில் ஆவேசம் படத்தில் பஹத் பாசில் பேசிய சில பஞ்ச் வசனங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகின. இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் துல்கர் சல்மானிடம் நீங்கள் ஏன் பஞ்ச் வசனம் பேசுவதில்லை என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “பஞ்ச் வசனங்களை சில ஹீரோக்கள் மட்டும் பேசினால் தான் அது பொருத்தமாக இருக்கும். நான் பேசினால் தம்பி இன்னும் நீ அந்த அளவுக்கு வளரவில்லை என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். கிங் ஆப் கொத்த படத்தில் கூட அதுதான் நடந்தது” என்று கூறியுள்ளார்.