பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசனின் 48வது படத்தினை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த ஆண்டில் அறிவித்தனர். இந்த படத்திற்காக நீண்ட தலைமுடி வளர்ந்து வந்த சிம்பு, தற்காப்பு கலைகளையும் கற்றார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் பிஸ்னஸ் என பல காரணங்களால் இந்த படத்தினை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகியது.
ஆனாலும், இந்த கதையை விட மனமில்லாமல் சிம்புவே இதற்கான முன் தயாரிப்பு பணிகளின் செலவை செய்து வந்தார். மறுபுறம் வேறு தயாரிப்பாளரை தேடி வந்தார். இந்த நிலையில் தற்போது ஒருமனதாக சிம்புவே இந்த படத்தை ஆட்மேன் சிலம்பரசன் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிக்க இருப்பதாக சிம்பு தரப்பில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சிம்பு, தனது தந்தையின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் சில படங்கள் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.