அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசனின் 48வது படத்தினை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த ஆண்டில் அறிவித்தனர். இந்த படத்திற்காக நீண்ட தலைமுடி வளர்ந்து வந்த சிம்பு, தற்காப்பு கலைகளையும் கற்றார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் பிஸ்னஸ் என பல காரணங்களால் இந்த படத்தினை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகியது.
ஆனாலும், இந்த கதையை விட மனமில்லாமல் சிம்புவே இதற்கான முன் தயாரிப்பு பணிகளின் செலவை செய்து வந்தார். மறுபுறம் வேறு தயாரிப்பாளரை தேடி வந்தார். இந்த நிலையில் தற்போது ஒருமனதாக சிம்புவே இந்த படத்தை ஆட்மேன் சிலம்பரசன் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரிக்க இருப்பதாக சிம்பு தரப்பில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சிம்பு, தனது தந்தையின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் சில படங்கள் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.