கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக கூறி வந்தார். ஆனால் உடனடியாக அவரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனை சந்தித்து அவர் கதை சொன்ன போது, அந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்தவர், தான் ஏற்கனவே கமிட் ஆகியிருக்கும் சில படங்களை பட்டியல் போட்டுள்ளார் .
அதாவது தற்போது நடித்துள்ள அமரன் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் இதையடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் எனது 23 வது படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தை முடித்த பிறகு டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் புறநானூறு ஆகிய படங்களில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருப்பதை தெரிவித்த சிவகார்த்திகேயன், கைவசம் உள்ள மூன்று படங்களையும் முடித்த பிறகு தான் உங்கள் இயக்கத்தில் நடிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதன் காரணமாகவே அதுவரைக்கும் சிவகார்த்திகேயனுக்காக வெயிட் பண்ண வேண்டாம் என்று வேறு சில நடிகர்களை சந்தித்து கால்ஷீட் கேட்டு வருகிறார் வெங்கட் பிரபு .