பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், தற்போது படத்தை 2025 சங்கராந்தி தினத்தில் வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றில் அறிவித்துள்ளார்.
“படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதை விட சங்கராந்தி தினத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என வினியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், சிரஞ்சீவி சாரின் 'விஷ்வம்பரா' படத்தையும் ஷங்கராந்தி தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். கடந்த மூன்று வருடங்களாக 'கேம் சேஞ்சர்' படத்தை எடுத்து வருவது குறித்து சிரஞ்சீவியிடமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திடமும் பேசினோம். அவர்களது படமும் டிசம்பர் மாதத்தில் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும். இருந்தாலும் எங்களுக்காக அப்படத்தை தள்ளி வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றி,” என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் தில் ராஜு.
அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள படத்தின் வில்லன் எஸ்ஜே சூர்யா, “டபுள் ஷங்கர்-ஆந்தி” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.