பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், தற்போது படத்தை 2025 சங்கராந்தி தினத்தில் வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றில் அறிவித்துள்ளார்.
“படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதை விட சங்கராந்தி தினத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என வினியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், சிரஞ்சீவி சாரின் 'விஷ்வம்பரா' படத்தையும் ஷங்கராந்தி தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். கடந்த மூன்று வருடங்களாக 'கேம் சேஞ்சர்' படத்தை எடுத்து வருவது குறித்து சிரஞ்சீவியிடமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திடமும் பேசினோம். அவர்களது படமும் டிசம்பர் மாதத்தில் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும். இருந்தாலும் எங்களுக்காக அப்படத்தை தள்ளி வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றி,” என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் தில் ராஜு.
அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள படத்தின் வில்லன் எஸ்ஜே சூர்யா, “டபுள் ஷங்கர்-ஆந்தி” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.