அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ஒரு காலகட்டத்தில் இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் இருவரின் படங்களில் நடிக்க விரும்புவது போல இயக்குனர் ராம்கோபால் வர்மா டைரக்ஷனில் நடிக்கவும் பல தென்னிந்திய ஹீரோக்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் கால சூழலில் அவரது சினிமா ஆர்வம் வேறு திசையில் சென்று விட்டாலும் தான் கூறும் விமர்சன கருத்துக்களாலும் சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடிய படங்களாலும் தொடர்ந்து பரபரப்பிலேயே தன்னை வைத்துக் கொண்டுள்ளார் ராம்கோபால் வர்மா. இந்த நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தானும் நடிகர் பஹத் பாசிலும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
உடனே ரசிகர்கள் இது குறித்து தங்களது பல்வேறு விதமான யூகங்களை பதிவிட துவங்கினர்.. குறிப்பாக அடுத்ததாக ராம் கோபால் வர்மா படத்தில் பஹத் பாசில் நடிக்க இருக்கிறார் என வழக்கம் போல கூற ஆரம்பித்தனர். ஆனால் தற்போது இந்த சந்திப்பு பின்னணி பற்றி கூறியுள்ள வர்மா, ஐதராபாத்தில் உள்ள டென் என்கிற தனது அலுவலகத்திற்கு பஹத் பாசில் தன்னை நேரில் வந்து சந்தித்தபோது எடுத்த படம் தான். இது எந்த ஒரு படப்பிடிப்புக்காகவும் அல்ல என்றும் கூறியுள்ளார்.
தற்போது தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் பஹத் பாசில் அங்கிருந்தபடியே ராம்கோபால் வர்மாவை நேரில் சென்று சந்தித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.