ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தியது ஏன்? இயக்குனர் எஸ்.பி முத்துராமன் | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம்: வடிவேலு காமெடி பண்ணுகிறாரா? | பிளாஷ்பேக் : விக்ரமை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற 'பூக்களை பறிக்காதீர்கள்' | பிளாஷ்பேக் : தமிழில் திரைப்படமான மலையாள நாடகம் | மீண்டும் ஒரு ராணுவ படத்திற்காக இணையும் மோகன்லால்-மேஜர் ரவி கூட்டணி | ஹிந்தியில் படம் தயாரிக்கும் நடிகர் ராணா | ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது |

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் ‛ஜெயிலர்' போல மிகப்பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் படம் மோசம் இல்லை, நன்றாக இருக்கிறது என்பது போன்று ரசிகர்களிடமும் விமர்சிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து முதன்முறையாக நடிக்கும் வாய்ப்பை மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்ற நடிகைகள் பெற்றுள்ளனர். இதில் நடிகை ரித்திகா சிங் படம் முழுவதும் ரஜினியுடன் இணைந்து பயணிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து சிலாகித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரித்திகா சிங்.
இது குறித்து அவர் கூறும்போது, “படப்பிடிப்பு தளத்தில் தன்னை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையும் ரஜினிகாந்த் எந்த அளவிற்கு வசதியாக உணரும்படி செய்கிறார் என்பதை நேரிலேயே பார்த்து பிரமித்து போனேன். அவருடைய பார்வையும் அந்த புன்னகையுமே அருகில் இருப்பவர்களின் மனதில் இருக்கும் கஷ்டங்களை போக்கும் அளவிற்கு வலிமையானவை. இன்னொரு ரஜினிகாந்த் வேறு எங்கேயும் இல்லை. அவரைப் போன்ற மனிதநேயமிக்க ஜாம்பவானையும் எங்கேயும் பார்க்க முடியாது. ஒருவேளை புதிதாக ஒரு பிரபஞ்சமே படைக்கப்பட்டாலும் கூட இவர்தான் இருப்பாரே தவிர இன்னொரு தலைவர் ரஜினி இருக்கப் போவதில்லை” என்று தனது பிரமிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.