Advertisement

சிறப்புச்செய்திகள்

கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

20 வருட சட்டப் போராட்டம்: ரூ.50 கோடி சொத்தை மீட்ட கவுண்டமணி

09 அக், 2024 - 09:54 IST
எழுத்தின் அளவு:
20-years-of-legal-battle:-Goundamani-recovered-Rs-50-crore-property


காமெடி நடிகர் கவுண்டமணி 90களில் உச்சத்தில் இருந்தார். அப்போது அவர் ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கினார். கவுண்டமணி தான் சம்பாதித்த பணத்தை கொண்டு ஏராளமான அசையா சொத்துக்களை வாங்கி குவித்தார். அந்த வகையில் கடந்த 1996ம் ஆண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுண்ட், 454 சதுர அடி நிலத்தை வாங்கினார். அங்கு வணிக வளாகம் கட்ட அவர் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி அந்த இடத்தை அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்திடம் கொடுத்து 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ரூ.3.58 கோடி கொடுத்தார். ஆனால் அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி கட்டுமான பணிகளை முடிக்கவில்லை. அதோடு அந்த இடத்தை அந்த நிறுவனமே கையகப்படுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தனது சொத்தை மீட்டுத் தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு கவுண்டமணி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கவுண்டமணியிடமிருந்து பெற்ற நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடப்பு மாதம் வரை மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் வாடகை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கட்டுமான நிறுவனம் 2021ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதிசெய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. இதை தொடர்ந்து நேற்று கவுண்டமணி தனது இடத்தை மீட்டார். இதன் தற்போதைய மதிப்பு 50 கோடி ரூபாய்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: பி.எஸ்.வீரப்பாவை கண்டுபிடித்த கே.பி.சுந்தராம்பாள்பிளாஷ்பேக்: பி.எஸ்.வீரப்பாவை ... மீண்டும் ஒரு தெருக்கூத்து படம் மீண்டும் ஒரு தெருக்கூத்து படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in