300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகன் சிரஞ்சீவி. அவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் 25 ஆயிரம் அடியில் பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. அங்குதான் அவர் வசித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்புதான் அந்த வீடு கட்டப்பட்டது.
பெங்களூரூ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே அவருக்குச் சொந்தமான பார்ம் ஹவுஸ் ஒன்றும் உள்ளது. அவரது குடும்பத்தினர், சகோதரர் குடும்பத்தினர் சில விசேஷமான நாட்களில் அந்த வீட்டிற்குச் செல்வார்கள். சென்னையிலும் சிரஞ்சீவிக்கு வீடு ஒன்று உள்ளது. தெலுங்குத் திரையுலகம் ஹைதராபாத் செல்வது வரை அந்த வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.
தற்போது தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலமான ஊட்டியில் 6 ஏக்கர் இடம் ஒன்றை சுமார் 16 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த இடத்தில் பார்ம் ஹவுஸ் ஒன்றைக் கட்ட உள்ளாராம். சமீபத்தில் அவரது மகனும் நடிகருமான ராம் சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் அங்கு சென்று ஆலோசனை மேற்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
சிரஞ்சீவியின் பல தெலுங்குப் படங்களில் ஊட்டி தவறாமல் இடம் பெற்றதுண்டு. அந்தக் காலத்திய படங்களில் அவரது பாடல் காட்சிகள் பலவும் அங்குதான் படமாக்கப்பட்டுள்ளது. அதனால், சிரஞ்சீவிக்கு ஊட்டி மீது தனி பாசம் என்கிறார்கள்.