லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரது விவாகரத்துக்குக் காரணம் தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சர் கேடிஆர் (முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகன்) என, தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் பெண் அமைச்சரான கொன்ட சுரேகா நேற்று (அக்.,2) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார்.
பல நடிகைகள் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகியதற்கு கேடிஆர் தான் காரணம் என்றும் மேலும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அமைச்சர் சுரேகா அப்படி பேசிய சில மணி நேரங்களிலேயே சமந்தா, நாகசைதன்யா மற்றும் நாகார்ஜுனா, அமலா, அவர்களது மகன் அகில் என நாகசைதன்யா குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் சில தெலுங்கு சினிமா பிரபலங்களும் அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
திரையுலகினரது தனிப்பட்ட விவகாரத்தை அரசியலாக்கிப் பேசுவது தவறு என்றும் சுட்டிக்காட்டினர். மேலும் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வரும், காங்., எம்.பி., ராகுல் ஆகியோரும் உடனடியாக பெண் அமைச்சர் சுரேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.