பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! |
இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கன்னடத்தில் வெளியான இந்த படம் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகி அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்கள் மட்டுமல்லாது பாலிவுட்டை சேர்ந்தவர்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். தற்போது இந்த படத்தின் ப்ரீக்வல் ஆக 'காந்தாரா சாப்ட்டர் 1' என்கிற பெயரில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் கன்னடத் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இதில் ரிஷப் ஷெட்டியின் தந்தை கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரிஷப் ஷெட்டி தனது மனைவியுடன் மோகன்லாலை சந்தித்தது கூட இந்த படத்தில் நடிப்பதற்கு அவரை அழைப்பதற்காக தான் என்றும் தற்போது சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.