நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கன்னடத்தில் வெளியான இந்த படம் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகி அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்கள் மட்டுமல்லாது பாலிவுட்டை சேர்ந்தவர்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். தற்போது இந்த படத்தின் ப்ரீக்வல் ஆக 'காந்தாரா சாப்ட்டர் 1' என்கிற பெயரில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் கன்னடத் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இதில் ரிஷப் ஷெட்டியின் தந்தை கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரிஷப் ஷெட்டி தனது மனைவியுடன் மோகன்லாலை சந்தித்தது கூட இந்த படத்தில் நடிப்பதற்கு அவரை அழைப்பதற்காக தான் என்றும் தற்போது சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.