அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
கவுண்டமணி செந்தில் ஜோடி மற்றும் வடிவேலுவின் வெற்றியே அவர்களது காமெடி கிராமங்களை பின்னணியாக கொண்டதுதான். தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் தம்பதிகள் காமெடி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு எதிர் களத்தில் நின்று கிராமத்து காமெடிகளால் கவனம் ஈர்த்தவர் காளி என்.ரத்னம். என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் ஜோடி போன்று காளி என்.ரத்னம் - ராஜகாந்தம் ஜோடியும் காமெடியில் சாதித்தனர்.
காளி என்.ரத்னம், 1897ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள மலையப்ப நல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார். 5ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். 12 வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் பெண் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். 'கோவலன்' என்ற நாடகத்தில் அவர் காளி வேடத்தில் நடித்து புகழ்பெற்றதால் வெறும் ரத்னமாக இருந்தவர் காளி. என்.ரத்னம் ஆனார்.
பதிபக்தி, ராஜமோகன், மாத்ரு பூமி, சபாபதி, மனோன்மணி, திவான் பகதூர், பர்மா ராணி, சூரிய புத்ரி, சிவலிங்க சாட்சி, நாடக மேடை, பிருதிவி ராஜன், போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். 14 வருடங்கள் சினிமாவில் நடித்தவர் 1950ம் ஆண்டு காலமானார்.