கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
கவுண்டமணி செந்தில் ஜோடி மற்றும் வடிவேலுவின் வெற்றியே அவர்களது காமெடி கிராமங்களை பின்னணியாக கொண்டதுதான். தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் தம்பதிகள் காமெடி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு எதிர் களத்தில் நின்று கிராமத்து காமெடிகளால் கவனம் ஈர்த்தவர் காளி என்.ரத்னம். என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் ஜோடி போன்று காளி என்.ரத்னம் - ராஜகாந்தம் ஜோடியும் காமெடியில் சாதித்தனர்.
காளி என்.ரத்னம், 1897ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள மலையப்ப நல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார். 5ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். 12 வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் பெண் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். 'கோவலன்' என்ற நாடகத்தில் அவர் காளி வேடத்தில் நடித்து புகழ்பெற்றதால் வெறும் ரத்னமாக இருந்தவர் காளி. என்.ரத்னம் ஆனார்.
பதிபக்தி, ராஜமோகன், மாத்ரு பூமி, சபாபதி, மனோன்மணி, திவான் பகதூர், பர்மா ராணி, சூரிய புத்ரி, சிவலிங்க சாட்சி, நாடக மேடை, பிருதிவி ராஜன், போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். 14 வருடங்கள் சினிமாவில் நடித்தவர் 1950ம் ஆண்டு காலமானார்.