மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் | தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன் | அன்னை இல்லத்தில் டும்டும் : ராம்குமார் மகன் தர்ஷனுக்கு திருமணம் | திருமண வேலைகளுக்கு இடையே டப்பிங்கை முடித்த நாகார்ஜுனா |
மலையாள திரையுலகில் மூத்த நடிகையான கவியூர் பொன்னம்மா வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். 80 வயதான அவர் 60 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பயணித்துள்ளார். மலையாள திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் அம்மாவாக நடித்ததுடன் மலையாள சினிமாவில் அம்மா என்றால் கடந்த 50 வருடங்களில் இவரைத்தான் கைகாட்டும் அளவிற்கு பெருமை பெற்றவர். இந்தநிலையில் நடிகை மஞ்சு வாரியர் இவரது மறைவு குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளதுடன் கவியூர் பொன்னம்மாவுடனான தனது நிறைவேறாத ஆசை ஒன்றையும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் அம்மாவாக பார்த்து வளர்ந்தது கவியூர் பொன்னம்மா சேச்சியை தான். அந்த அளவிற்கு அம்மா என்றால் அவர்தான். பிறகு அவருடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் எனக்கு அவரது மகளாக நடிக்கும் பாக்கியம் கிடைக்கவே இல்லை என்பது மிகப்பெரிய வருத்தமாகவே இப்போது வரை இருக்கிறது. கண்ணெழுதி பொட்டும் வைத்து என்கிற படத்தில் அவருடைய தங்கையாக நான் நடித்து இருந்தேன். அதே சமயம் நான் அவரது மகளாக நடிக்காவிட்டாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு அம்மா மகளை போலவே வாழ்ந்தோம்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.