நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தென்னிந்திய சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரோஜா ரமணி. 1967ல் வெளியான 'பக்த பிரஹலாதா' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அவர் பிரகலாதா வேடத்தில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 5 . இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் இந்த படம் தமிழிலும் வெளியானது. மேலும் இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார்.
இந்தப் படத்தில் நடிக்கும் வரை ரோஜா ரமணி ஒரு திரைப்படம் கூட பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பிறந்த ரோஜா ரமணி படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில் ஏவிஎம் செட்டியார் கண்ணில் பட்டு நடிகையாக அறிமுகமானார். ஐந்து வயது முதல் 12 வயது வரை சுமார் 80 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு நாயகியாக நடித்தார்.