அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தென்னிந்திய சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரோஜா ரமணி. 1967ல் வெளியான 'பக்த பிரஹலாதா' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அவர் பிரகலாதா வேடத்தில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 5 . இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் இந்த படம் தமிழிலும் வெளியானது. மேலும் இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார்.
இந்தப் படத்தில் நடிக்கும் வரை ரோஜா ரமணி ஒரு திரைப்படம் கூட பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பிறந்த ரோஜா ரமணி படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில் ஏவிஎம் செட்டியார் கண்ணில் பட்டு நடிகையாக அறிமுகமானார். ஐந்து வயது முதல் 12 வயது வரை சுமார் 80 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு நாயகியாக நடித்தார்.